புதுச்சேரியில் உயிருக்கு போராடும் குழந்தை.. அவசர சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுங்களேன்!
சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான்.
புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள்.
2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான அபிராம சுந்தரி சேர்க்கப்பட்டு அங்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை மிகவும் எடை குறைந்ததாக இருந்தது. கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது Large Mid Muscular VSD, Distal Coarctation of aorta, Moderate sized Ostium Secundum ASD & Severe PAH என்ற இதய நோய் இருப்பது தெரியவந்தது.
எனவே, Coarctation repair + VSD Closure surgery for correction of the same என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு ரூ.3,10,000 அளவுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. ஐசியூ சிகிச்சை, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு மற்றும் மருந்துகள் போன்ற பல்வேறு வகையான செலவினங்களுக்கு இந்த பணம் தேவைப்படுகிறது.
ஏற்கனவே, லாக்டவுன் காரணமாக டீ கடையை மூடி வைத்திருந்த வெங்கடேச பெருமாள் தற்போது இந்த நிதி சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார். எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் மனது வைக்கவும். வங்கி கணக்கு வழியாகவோ, அல்லது கூகுள் பே, வாட்ஸ்அப், போன் பே, அமேசான், பீம் என எதன் மூலமாகவும் நீங்கள் பணத்தை அனுப்ப முடியும். அதற்கான இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
RECOMMENDED STORIES