துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி இணைய வழியாக இன்று நடக்கிறது.
WHD எனும் சர்வதேச அளவிலான மனிதாபிமான அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- செப். 25-ல் 'பாரத் பந்த்'- 250 விவசாய சங்கங்கள் அழைப்பு!
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் ! என்ற இந்த நிகழ்ச்சியில் அழகிய கடல் கடந்த சமாதான உரையாடல் என்ற தலைப்பில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் சுப்ரமணியம் தொடக்கவுரை நிகழ்த்துகிறார். மனித நேயம் எனும் தலைப்பில் ஆசிப் மீரானும், அன்பான குடும்பம் எனும் தலைப்பில் கவிதாயினி கலாவிசுவும், தானங்களில் சிறந்தது சமாதானம் எனும் தலைப்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கவிஞர் அப்துல் ரஹீம், நைவினை நணுகேல் எனும் தலைப்பில் கவிதாயினி கவிஞர் கவிதா சோலையப்பனும் உரை நிகழ்த்துகின்றனர்.
முனைவர் கல்லிடைக்குறிச்சி ஆ. முகமது முகைதீன் நடுநிலைமை வகிக்கிறார். இந்த நிகழ்ச்சியானது யூடியூப் மூலம் நேரடியாக பார்க்க கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.