அடேங்கப்பா.. சென்னையை சேர்ந்த நபருக்கு துபாயில் அடித்த சூப்பர் அதிருஷ்டம்
துபாய்: அதிருஷ்டம் என்றால் இதுதான் அதிருஷ்டம். சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு துபாயில், அதிநவீன சொகுசு காரான பிஎம்டபிள்யூ பரிசாக கிடைத்துள்ளது என்றால் சும்மாவா?
துபாயில் கார்கோ தொழில் செய்து வருபவர், என்.எஸ்.ஒய்.சையது. இங்கு 30 வருடங்களாக வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் சென்னை. துபாயில் நடைபெற்ற டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கி சென்றிருந்தார் சையது.
டென்னிஸ் போட்டி டிக்கெட்டுகளை வாங்கியவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் எழுதி பரிசளித்தது போட்டி நிர்வாகம். இதில்தான் முதல் பரிசு பெற்றுள்ளார் சையது.
துபாய் டுட்டி பிரீ ஃபைனல் பிரைஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற, உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், இத்தொடரின் சாம்பியனுமான, ஜோகோவிக் குலுக்கலில் வெற்றியாளர்கள் பெயரை எடுத்தார். அவரது கைகளால், சையது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
#Indian expat wins #BMW at #DubaiDutyFree raffle drawhttps://t.co/UpIlaeO5wP@DDFTennis @DubaiAirports @DjokerNole pic.twitter.com/xQYqKq6vJN
— Khaleej Times (@khaleejtimes) March 2, 2020
ஒரு BMW 750Li xDrive M ஸ்போர்ட்ஸ் (மினரல் ஒயிட்) அதிநவீன சொகுசு வாகனம் சையதுக்கு கிடைத்துள்ளது. டெல்லி ஷோரூம் விலை நிலவரப்படி இந்த வகை கார், ரூ.1 கோடியே 35 லட்சத்திலிருந்து துவங்குகிறது குறிப்பிடத்தக்கது. அப்படின்னா இது பக்கா அதிருஷ்டம்தானே!