தோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது
துபாய்: அம்பையர் வைடு கொடுக்கப் போனபோது தோனி கத்தி வாக்குவாதம் செய்ததால், அவர் தனது முடிவை கை விட்டதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சை விஷயமாக மாறியுள்ளது.
18.2 வது ஓவரின்போது ரஷீத் கானுக்கு தாக்கூர் வீசிய பந்து வைடாக போனது. எனவே வைடு கொடுக்க நடுவர் பால் ரைஃபல் கையை அகல விரிக்கச் சென்றார். ஆனால் தோனி கோபத்தோடு, இது வைடு இல்லை என்று, வாக்குவாதம் செய்தார். அவரது குரலையும், ஆவேசத்தையும் பார்த்த நடுவர் சட்டென முடிவை மாற்றி வைடு இல்லை என பஞ்சாயத்தை முடித்துவிட்டார்.
நடுவர் தனது முடிவை எப்படி மாற்றலாம்.. தோனி கோபப்பட்டால் நடுவர் அழகான வைடு பந்தை கூட இல்லை என கூறுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்
நடுவர் செய்தது தப்பில்லை
வெற்றி இலக்கை ஹைதராபாத் அணி எட்டிப் பிடிக்க வாய்ப்பு இருந்தபோது இந்த வைடு தரப்படாததுதான் சர்ச்சைகள் அதிகரிக்க காரணம். அதேநேரம், கிரிக்கெட் விதிமுறைகள்படி, நடுவர் பால் செய்தது தப்பு இல்லை. ஏனெனில், நடுவர் தனது முடிவை மாற்றம் செய்து கொள்ளலாம், அதை முறைப்படி செய்து கொண்டால் பிரச்சினை இல்லை என்ற சலுகை தரப்பட்டுள்ளது. அதை பால் பயன்படுத்தியுள்ளார். ஆனால் வைடு என்பது நன்கு தெரிந்தும் ஏன் நடுவர் வைடு தரவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக மீம்கள் சுடச் சுட பறக்கின்றன.
ஏழாம் அறிவு தோனி
ஏழாம் அறிவு திரைப்படத்தில், டாங் லீ, கதாப்பாத்திரம், நோக்கு வர்மத்தால், எதிராளியை கட்டிப்போடும். அதேபோல இவர் தோனி லீ. பார்வையாலே எதிரில் நிற்பவரை கட்டுப்படுத்திவிடுவார் என்று சொல்கிறது இந்த மீம்.
ஆடு திருடு போகல
சூனா பானா ஆட்டை திருட.. ஆட்டு உரிமையாளர் பஞ்சாயத்தை கூட்ட.. சூனா பானா மிரட்ட.. ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்று பிராது கொடுத்தவர் பல்டியடிப்பார். இதுவும் அப்படித்தான் இருக்கிறது.
அதுக்கு என்ன இப்போ
அது பக்கா வைடு என்று, பிற அணி ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். சிஎஸ்கே ரசிகர்களுக்கும் அது தெரியும். அதுக்கு என்ன இப்போ.. போடா வைடு கொடுத்தாச்சு என சிஎஸ்கே ஃபேன் கிண்டல் செய்தால் எப்படி இருக்கும் என்று கூறுகிறது இந்த மீம்.
முறுக்கிய தோனி
நடுவர் கையை விரிக்கச் சென்றபோது, தோனி இப்டித்தான் கையை முறுக்கியிருப்பார் என்று சொல்கிறார் இந்த தெலுங்குப்பட ரசிகர்.