துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்

துபாய் பீச்சில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் தொடையை தடவிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அது தெரியாமல் நடந்தது என்று முதலில் சொன்ன நபர் பின்னர் தனது தவறை ஒத்துக்கொண்டார்.

Google Oneindia Tamil News

துபாய்: உலகம் முழுவதுமே பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. துபாயில் கடற்கரையில் ஓய்வாக படுத்திருந்த பெண்ணின் முதுகு, தொடையைத் தடவியதாக ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்றும், பந்தை பிடிக்கப் போகும் போது தெரியாமல் நடந்து விட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். பந்து உருண்டோடியபோது அதைப் பிடிப்பதற்காக போனபோது கை தொடை மற்றும் முதுகில் பட்டு விட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.

அந்த நபர் கைது செய்யப்பட்டு தங்கள் பாணியில் போலீசார் விசாரித்த பின்னர் நடந்த சம்பவம் தெரிந்தே நடந்ததுதான் என்று கூறி உண்மையை ஒத்துக்கொண்டார்.

வெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையில் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ் வெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையில் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ்

துபாய் கடற்கரையில் விளையாட்டு

துபாய் கடற்கரையில் விளையாட்டு

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அவர், கார்பெண்டராக துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவர் துபாய்

கடற்கரைக்கு வந்துள்ளார். தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். உம் சுகிம் பீச்சில் அவர் விளையாடியபோது தான் மேற்படி சம்பவம் நடந்துள்ளது

தடவிய நபர்

தடவிய நபர்

இந்த நபர் மீது 24 வயது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒரு போலீஸ் புகார் கொடுத்தார். அதில், தனது நண்பர்களுடன் நீச்சலுக்காக கடற்கரைக்கு வந்தபோது

இந்த நபர் தனது தொடை மற்றும் முதுகில் கை வைத்து தடவியதாக அவர் கூறியிருந்தார்.

துபாய் போலீசில் புகார்

துபாய் போலீசில் புகார்

நான் கோபமடைந்தேன். அவரது கையைத் தள்ளி விட்டேன். எனது நண்பர்களும் கோபமாக அந்த நபரிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது அவர் பதில் தரவில்லை. மாறாக சிரித்தார். இதையடுத்து நான் துபாய் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தேன். போலீஸார் வந்து கைது செய்தனர் என்று கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட நபர்

மன்னிப்பு கேட்ட நபர்

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சம்ம்பவம் உண்மைதான். தொடையைத் தடவியதாக பெண் கூறுகிறார். பந்து பிடிக்க போனபோது தெரியாமல் பட்டு விட்டதாக அந்த ஆண் கூறுகிறார். ஆனால் தீவிர விசாரணைக்குப் பிறகு தனது தவறை அந்த நபர் ஒத்துக் கொண்டார். அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டார். தற்போது அந்த நபர் மீது போலீஸார் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறதாம் இந்த வழக்கு.

English summary
A man accused of groping a woman’s backside on a Dubai beach has claimed that he touched her by accident while trying to catch a ball, the Dubai Court of First Instance heard.The trial reconvenes on June 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X