துபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் இன்று 25.01.2019 காலை 10 மணியளவில் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஐக்கிய அமீரக துபாய் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 25வது மாபெரும் ரத்த தான முகாம் துபாய் அரசாங்க லத்திபா மருத்துவமனை உடன் இனைந்து தமுமுக அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், தமுமுக அமீரக துணை தலைவர் ஏஎஸ் .இப்ராஹிம், தமுமுக அமீரக பொருளாளர் டாக்டர். அப்துல் காதர், தமுமுக அமீரக துணை செயலாளர் கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் சஞ்சீவ் குமார், தூதரக அதிகாரி (consul), அமீரக திமுக தலைவர் எஸ். எஸ்.மீரான், எமிரேட்ஸ் செம்பிறை சமூக விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ஃபைஸ் முகம்மது, முஸ்லிம் லீக் அமீரக பொதுச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், தொழிலதிபர் இளையான்குடி அபுதாஹீர், டாக்டர் முகையதீன், தொழிலதிபர் ஹசீனா, தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்,,காங்கிரஸ் பொருப்பாளர் ஜுனைத், முஸ்லிம் லீக் துபாய் மண்டல பொருப்பாளர் பரக்கத் அலி, அமானுல்லாஹ், சகோ. நியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
இதில் தமுமுக துபாய் மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது, தமுமுக துபாய் மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக துபாய் மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக துபாய் மண்டல துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மக்கள் செய்தி தொடர்பாளர் திருச்சி பிலால்,மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக்,துபாய் மண்டல தமுமுக ஊடக பிரிவு செயலாளர் முத்துப்பேட்டை பைசல் மற்றும் மண்டல,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அயல்நாட்டிலும் தமுமுக சேவைகளை இந்திய தூதரக அதிகாரி பாராட்டினார். தமுமுக நடத்திய இரத்த தான முகாம்கள் அனைத்து மக்களுக்கும் மிக அவசியமானதும் இக்காலகட்டத்தில் மிக முக்கியமானதும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியை தமுமுக அமீரக துனை தலைவர் சகோதரர் ஏஎஸ் இபுராகிம் தொகுத்து வழங்கினார் 100 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு ரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.