For Daily Alerts
Just In
தேர்தல் படுதோல்வியால் அரசியலுக்கு முழுக்கு- 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அதிரடி!
தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா
இம்பால்: தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அரசியல் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டு காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அண்மையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
அரசியல் கட்சியைத் தொடங்கிய கையோடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். தெளபால் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகளே கிடைத்தன.
இது நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இத்தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து அரசியலில் இருந்தே தாம் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இரோம் ஷர்மிளா.
தம்மை மக்கள் ஆதரிக்காததால் தாம் அரசியலில் இருந்து விலகுகிறேன் என இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.
Comments
manipur assembly election 2017 irom sharmila defeat politics quit மணிப்பூர் சட்டசபை இரோம் ஷர்மிளா அரசியல் தோல்வி விலகல்
English summary
Irom Sharmila has decided to quit politics after crushing defeat in Manipur Assembly elections.
Story first published: Saturday, March 11, 2017, 17:13 [IST]