மைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடி. வெகுண்டெழுந்த பெண்கள்.. சமரசத்திற்கு ஒப்புதல்
ஈரோடு: மைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடியை கண்டித்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை வெகுண்டெழுந்து பெண்கள் முற்றுகையிட்டதால்
சமரசத்திற்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியாக வருவாய் இழந்தனர். இதற்கிடையே தொழில் துவங்குதற்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் வார வாரம் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பால் கடந்த 3 மாதங்களாக கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் மைக்ரோ பைனாஸ் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்ற பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூல் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.
தற்போது வாழ்வாரதாரமின்றி தவித்து வரும் வேளையில், குடும்பத்தினரை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவைச் பெண்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் ரிசர்வ் வங்கி உத்தரவுபடி 3 மாதங்களுக்கு கடன் தவனை வசூலிக்க கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிதிநிறுவன அலுவலர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து மகளிர் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Coimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை