நிறுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது முழு விவரங்களை வெளியே சொல்வோம்.. பிரேமலதாவை எச்சரிக்கும் சந்திரகுமார்
Recommended Video
ஈரோடு: பிரேமலதா பொய் சொல்வதை நிறுத்தாவிட்டால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் கூறியுள்ளார்.
தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, திமுக பொருளாளர் துரைமுருகன் விழா மேடைகளிலேயே தூங்குபவர் என்ற கேள்விப்பட்டுள்ளேன். வயதாகிவிட்டதால் நிதானம் தவறி பேசி வருகிறார் என்றெல்லாம் மிக மோசமாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏவுமான, சந்திரகுமார், பிரேமலதாவை சாடியுள்ளார்.
திமுகவா அதிமுகவா தினகரனா.. என்னது தேர்தல் முடிஞ்சுருச்சா.. தேமுதிகவை வறுக்கும் நெட்டிசன்கள்!
அரசியல் மறுவாழ்வு
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: பிரேமலதா பேச்சு மோசமானதாக உள்ளது. தேமுதிக தற்போது அரசியல் மறுவாழ்விற்காக மாறிமாறி அலைந்து கொண்டு இருக்கிறது. பிரேமலதா கட்சி விஷயங்களில் எப்போது தலையிட ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே தேமுதிகவை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றி வருகிறார்.
அவதூறுகள்
ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடமும் கூட்டணி பேரம் பேசிய செயலை இதுவரை தமிழகத்தில் யாரும் செய்யவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி, பிரேமலதா தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.
பொய்யை நிறுத்துங்கள்
மருத்துவமனையில், கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை விஜயகாந்த் சந்திக்க அனுமதி கேட்டதாகவும், மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும், பிரேமலதா கூறி வருகிறார். இது சுத்த பொய்யாகும். பொய் சொல்வதை அவர் உடனே, நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டி இருக்கும்.
மக்கள் விரும்பும் தலைவர்
வரும் லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணி, மிக பெரிய தோல்வியை சந்திக்கும். இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணியாக உள்ளது. மு.க.ஸ்டாலின்தான், மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார். இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.