கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
ஈரோடு: கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை என கூறினார்.
கூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம்.. செல்லூர் ராஜு திடீர் தகவல்
இது, வேண்டுமென்றே திட்டமிட்டு புரளி பரப்பப்படுவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியின் முன் கேட்டை மூடி விட்டு பின் கேட் வழியாக மாணவர்கள் வரவேற்கப்படுவதாக கூறப்படுகிறது அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு 1.17 லட்சம் பேர் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள் எனவும் இந்த முறை 1.50 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப் படுவதாகவும் அவர் கூறினார்.