ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவராக உள்ளவர் சி கதிவரன் ஐஏஎஸ். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்,. முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.
பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி?
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவனுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி, சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீதாலட்சுமி, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள்.