சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
ஈரோடு: எந்த ஒரு தாயும் வீட்டை விட்டு வெளியே ஏதாவது ஒரு காரியத்திற்காக செல்ல வேண்டுமென்று முனைகின்ற போது அவரை முதலில் தடுக்கக் கூடிய விஷயம் குழந்தையை எங்கே விட்டுச் செல்வது என்பதே.
அதிலும் குடும்ப வன்முறை காரணமாக காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பெண்களை தடுப்பது குழந்தைகளை எங்கே விட்டுச் செல்வது என்ற பிரச்சனையே.
அப்படியே கூட்டிச் சென்றாலும் நீங்கள் என்ன காரியத்திற்காக சென்றீர்களோ அந்த காரியத்தை குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உங்களால் முடிக்க முடியுமா என்பதே பெரிய சவால்.
இளம்பெண்ணின் மடியில் காசி.. தலையில் போலீஸ் தொப்பி.. ஜாலி செல்பி.. அதிர வைக்கும் வைரல் போட்டோ!
இது பெண்களுக்கு மட்டுமல்ல. தனியே குழந்தையை வளர்க்கின்ற ஆண்களுக்கும் பொருந்தும். நிலைமை இப்படி இருக்க, ஈரோடு மாவட்டம், பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களின் குழந்தைகள் விளையாட புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஈரோடு மாவட்ட காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
காவல்துறை உங்கள் நண்பன் என்று பலமுறை கேள்விப்பட்டும் விலகியே நின்ற மனது இன்று உண்மையிலேயே நண்பனைக் கண்டுகொண்ட சந்தோஷத்துடன் இருக்கின்றது.
பெண்ணியம் பேசும் ஆயிரம் எழுத்துக்களை விட பெண்ணியத்தை இந்த சமூகத்தில் இயங்கச் செய்திடும் இந்தச் செயல் மிக உயர்வாகப் பார்க்கப்படுகின்றது.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நெகழ்ச்சி !!
செய்தி: கெளசல்யா