ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சார் அடிக்காதீங்க.. தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த இளைஞர்.. வெளியே இழுத்து வெளுத்த போலீஸ்

Google Oneindia Tamil News

ஈரோடு: போலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த வாலிபரை அழைத்து வந்து அடித்து துரத்திய காட்சி வைரலாகி வருகிறது.

Recommended Video

    போலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டுக்குள் ஓடிய இளைஞர்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அதையும் மீறி நடமாடுவோரை போலீஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வாகன பதிவு எண்ணை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த முறையும் அவர்கள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்புகின்றனர்.

    தடி

    தடி

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில போலீசார் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர். ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்ததை கண்ட போலீசார் தங்களின் கைகளில் வைத்திருந்த தடியால் அடித்துத் துரத்தினர்.

    நுழைவு

    நுழைவு

    இந்த நிலையில் சாம்ராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது ஒரு வாலிபர் தனது ஸ்கூட்டரின் அருகே நின்றதைக் கண்ட போலீசார் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என தடியால் அடித்ததால் அடிக்கு பயந்து வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்தார்.

    தடியடி

    தடியடி

    அப்போது வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் போலீசார் இதை கண்டு அந்த வாலிபரிடம் யார் வீட்டில் நுழைந்தாய் வெளியே வா என அழைத்து மீண்டும் அடித்துத் துரத்தி அடித்தனர். அப்போது அந்த வாலிபர் தடியடிக்கு பயந்து கொண்டு மீண்டும் தப்பி ஓடினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

    தீவிரம்

    தீவிரம்

    கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A video goes viral as a man enters into another house after police did lathicharge on him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X