திடீரென தோன்றிய மகான்.. 10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்!
10 அடி குழி தோண்டி பூஜை செய்து வருகிறார் சாமியார் விஸ்வநாதன்
Recommended Video
ஈரோடு: கனவில் தோன்றிய மகான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக, 10 அடி ஆழ குழிக்குள் சாமியார் செய்து வரும் பிரார்த்தனையை காண பக்தர்கள் பலரும் ஈரோடு வந்து செல்கிறார்கள்.
அந்தியூர் அருகே நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தர் விஸ்வநாதன். இவருக்கு கல்யாணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஆனால், 25 வருஷமாக குடும்பத்தை விட்டு துறவறத்தில் உள்ளார்.
ஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா கற்று தருகிறார்.. நிறைய ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார்.
பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை!
மகான்
இந்நிலையில் விஸ்வநாதன், அமர்நாத் யாத்திரை சென்றார். அங்கு ஒருநாள் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மகான் கனவில் தோன்றினாராம். ''நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருந்தால், உலக நன்மை கிடைக்கும்" என்று சொல்லி உள்ளார்.
தோற்றம்
கனவில் தோன்றிய அந்த மகான் சொன்ன வார்த்தையை கேட்டு, நல்லிக்கவுண்டன்புதூர் வந்த விஸ்வநாதன், ஆளே வித்தியாசமாக இருந்தார். பெரிய தாடி வளர்ந்திருந்தது.. நிஜானந்த காசி விஸ்வநாத சாமி என்று தன் பெயரையும் மாற்றி கொண்டார்.
மவுன விரதம்
மகான் சொன்னபடி, 10 அடி ஆழ பள்ளத்தை தோண்டி, அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் இருக்க போவதாக ஊருக்குள் சொன்னார். அப்போது இவர் பேச்சை ஒருசிலர் நம்பவில்லை.. ஒருசிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.
48 நாள் விரதம்
சொன்னபடியே பள்ளம் தோண்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். போன 17-ந் தேதி இரவு அந்த குழிக்குள் இறங்கிய விஸ்வநாதன் தியானம், பூஜை செய்து, எதுவும் சாப்பிடாமல்.. மவுன விரதத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.. மொத்தம் 48 நாள் விரதம் இருக்க போகிறாராம்.
பக்தர்கள்
இப்போது அங்கு பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுத்து வருகிறது.. பக்தர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி விளக்கம் சொல்கிறாராம்.. மேலும் குழிக்குள் இருந்தே ஆசியும் வழங்கி வருகிறாராம்.. இதனால் நல்லிக்கவுண்டன்புதூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.