ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருந்துறையில் காற்றில் பறக்கும் கட்சி மானம்..திமுக ஜெயித்தது எப்படி.. பெரும் குமுறலில் அதிமுக!

பெருந்துறை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருப்திகரமான வெற்றி கிடைக்காமல் போனதால் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

பெருந்துறை தொகுதி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற அசைக்க முடியாத தொகுதி ஆகும்.. அதிமுக ஆட்சி கால் பதிக்க காரணமாக இருந்தது பெருந்துறை!

கடந்த 2016-ல் தேர்தலின்போது, ஜெயலலிதா, மின் துறை அமைச்சர் தங்கமணியின் தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளுக்கும் மையப்பகுதியாக பெருந்துறையைதான் தேர்ந்தெடுத்திருந்தார்.. இங்கு அசுர வேகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தி காட்டினார்.. அப்போதைய அதிமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூட அடித்தளமிட்ட தொகுதி பெருந்துறை!

கடந்த 10 ஆண்டின் பிரசித்தி பெற்ற ஆங்கில வார்த்தை எது? அமெரிக்க மொழி வல்லுநர்கள் அதிரடி அறிவிப்பு கடந்த 10 ஆண்டின் பிரசித்தி பெற்ற ஆங்கில வார்த்தை எது? அமெரிக்க மொழி வல்லுநர்கள் அதிரடி அறிவிப்பு

ஜெயலலிதா

ஜெயலலிதா

பொதுவாக எல்லா இடங்களிலும் ஹெலிகாப்டர் மூலமாகவே பிரச்சாரத்துக்கு சென்று வரும் ஜெயலலிதா, அன்று பெருந்துறையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கிளம்பும்போது... இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை பார்த்து, பரவசமடைந்தது.. காரிலேயே கோவைக்கு சென்றார்.. இப்படி ஒரு மெகா கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்று தந்ததும் இதே பெருந்துறை தொகுதிதான். ஆனால், இதை மாவட்ட அமைச்சர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் அதிமுகவை ஜெயித்து விடக்கூடாது என சில சுயேச்சைகளுக்கும் ஆதரவு தந்துள்ளனராம்.. பெருமளவில் இதில் பணம் கைமாறியதாகவும், இதனால்தான் சுயேச்சைகளும், திமுகவை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.. அதாவது எப்படியும் திரும்பவும் தோப்பு வெங்கடாச்சலம் செல்வாக்கு பெற்றுவிடுவார் என்பதாலேயே இந்த உள்ளடி வேலை நடந்ததாக சொல்லப்படுகிறது.

வருத்தம்

வருத்தம்

ஏனென்றால், இவர் முன்னாள் அமைச்சர் என்றாலும், அதே செல்வாக்கு தற்போதும் தொகுதிக்குள் உள்ளதாம்.. தன் தொகுதி மக்களிடமும் நெருங்கி பழகி வருவதாலும், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாலும் இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள். அதனால்தான், எப்படியும் சேர்மன் பதவியை அதிமுக கைப்பற்ற கூடாது என அமைச்சரே வரிந்து கட்டி கொண்டு வேலை பார்த்து வருவதாகவும், கட்சியின் கட்டுப்பாடு பெருந்துறையில் காற்றில் பறப்பதாகவும் தொகுதி அதிமுகவினர் வருத்தப்படுகிறார்களாம்.. முதலமைச்சரிடத்தில் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு கெட்ட பெயரை உருவாகக் வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளக்கம்

விளக்கம்

இந்த குற்றச்சாட்டு, புகார் குறித்து தோப்பு வெங்கடாச்சலத்திடம் " ஒன் இந்தியா தமிழ்" சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர், "மறைந்த முதல்வர் அம்மா இருந்தபோதும், முதல்வர் எடப்பாடியார் இருந்தபோதும், பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறேன்.. யார் எந்த துரோகத்தை செய்தாலும் சரி, தொகுதி மக்களும், நான் வணங்குகிற தெய்வமும் அதை பார்த்து கொள்வார்கள்" என்றார்.

English summary
perundhurai consitution mla and former minister thoppu venkatachalam slams minister karuppannan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X