ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ

    ஈரோடு: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    போட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை! போட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை ஸ்டாலினுக்கு தெரியவில்லை. நான் விவசாயிகளுக்காக பணியாற்றுகிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி. எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும்.

    ஒரு விவசாயி

    ஒரு விவசாயி

    இப்போது ஒரு விவசாயிதான் உங்களுக்கு முதல்வராக இருக்கிறார். நாளை நான் முதல்வராக இல்லையென்றாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வராக வருவார். இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான். நான் முதல்வராக இல்லாவிட்டால் எனக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.

    பழனிச்சாமி எப்படி

    பழனிச்சாமி எப்படி

    முதல்முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நான் முதல்வராக இல்லாமல் போனாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வர் ஆவார் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வர் ஏன் இப்படி பேசுகிறார், இப்போதே ஏன் அடுத்த முதல்வர் குறித்து பேசுகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

    அதிமுக மாற்றம்

    அதிமுக மாற்றம்

    அதிமுக இந்த தேர்தலுக்கு பின் பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது என்று கட்சிக்கு நெருக்கமான நபர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 8 இடங்களை ஜெயிக்க வேண்டும். சரியான கணக்குப்படி 4 இடங்களை வென்றால் போதும். ஆனால் அதிருப்தி உறுப்பினர்கள் இருப்பதால் மொத்தம் 8 இடங்களை வென்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும்.

    ஆட்சி எப்படி

    ஆட்சி எப்படி

    இதனால் தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியை காப்பாற்ற வேறு ஒரு நபர் கூட முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத இன்னொரு நபர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள், சமயத்தில் டிடிவி தினகரனின் அமமுக உதவியுடன் அதிமுக ஆட்சி அமைய கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்போது கண்டிப்பாக புதிய முதல்வர் ஒருவர் வருவார் என்று கூறுகிறார்கள்.

    யார் அவர்

    யார் அவர்

    இதை கருத்தில் கொண்டுதான் முதல்வர் இப்போதே இப்படி பேசினார். காரணம் இல்லாமல் அவர் அடுத்த முதல்வர் குறித்து பேசவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பழனிச்சாமி எந்த விவசாயியை முதல்வர் ஆக போகிறார் என்று மறைமுகமாக கூறினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது.

    English summary
    If I am not, Then He will be the next CM says TN CM in Erode campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X