ஹோட்டலில் சாப்பிட்டால் பணம் தர மாட்டார்கள்.. திமுக-வுக்கா உங்கள் ஓட்டு?.. அமைச்சர் தங்கமணி பேச்சு
ஈரோடு: ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவினருக்கு, வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்குமா? என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பாளையம், சின்னா கவுண்டனூர், அலமேடு, தாஜ் நகர் உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டினுடைய பிரதமராக மரியாதைக்குரிய நரேந்திர மோடி மீண்டும் வரவேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும், பாதுகாப்பான தலைவர் வேண்டும் அதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க.வினர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் என்றார்.
தேர்தல் முடியட்டும்.. ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.. முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்
முன்னதாக, மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அதற்கான ஆதாரம் இருந்தால் தன்னிடம் தரலாம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதே நேரம், திமுக வெற்றி பெற்றுவிட்டால் பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை துன்புறுத்துவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.