ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 வருடம் பலாத்காரம்.. கருக்கலைப்புகள்.. பொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்- வீடியோ

    கோவை: ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்துகொண்டு நான்கு ஆண்டுகளாக மிரட்டியே, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு காந்தி நகரைச் சேர்ந்த அந்த மாணவி, திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

    இந்த நிலையில்தான், கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள கடைக்கு சென்று வந்தபோது, மாணவிக்கு, வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    போலீஸ்.. போலீஸ்.. சத்தத்தை கேட்டதும்.. போலீஸ்காரர்களே அரண்டு போனார்கள்.. ஏன்? போலீஸ்.. போலீஸ்.. சத்தத்தை கேட்டதும்.. போலீஸ்காரர்களே அரண்டு போனார்கள்.. ஏன்?

    காரில் சில்மிஷம்

    காரில் சில்மிஷம்

    ராதாகிருஷ்ணன், ஏற்கனவே திருமணமானவர். இருந்தாலும், மாணவி, அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் பிறந்த நாளன்று, இருவரும் ஏற்காடு சென்றுள்ளனர். ஏற்காடு செல்லும்போது, காரில் சென்றபோதே, செல்போனில் ராதாகிருஷ்ணன், ஆபாசப்படங்களை காட்டி, மாணவி, உணர்ச்சிகளை தூண்டியுள்ளார்.

    செல்போன் வீடியோ

    செல்போன் வீடியோ

    அப்போது, மாணவியுடன், சில்மிஷ சேஷ்டைகளை நடத்தியுள்ளார் ராதாகிருஷ்ணன். இந்த சில்மிஷங்களை செல்போனில் ரகசியமாக வீடியோவாகவும் எடுத்துள்ளார் ராதாகிருஷ்ணன். ஏற்காடுக்கு சென்று ஜாலியாக சுற்றித் திரிந்த ஜோடிகள் மீண்டும் ஈரோடு திரும்பினர். ஆனால் அதன்பிறகுதான், ராதாகிருஷ்ணன் தனது உண்மை முகத்தை வெளியே காட்டியுள்ளார்.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால், இந்த சில்மிஷ வீடியோக்களை, இணையதளத்தில் பதிவேற்றுவேன் என்று, மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, ஈரோடு பேருந்துநிலையம் எதிரேயுள்ள, லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு ராதாகிருஷ்ணன் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதையும், ரகசியமாக வீடியோவாக எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

    4 பிரிவுகளில் வழக்கு

    4 பிரிவுகளில் வழக்கு

    இருமுறை இந்த மாணவிக்கு கருக்கலைப்பும் நடந்துள்ளது. ஆனால், மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கவனித்த அவரது, பெற்றோர் இது குறித்து கேட்டனர். தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி கூற, அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி பாணியில்

    பொள்ளாச்சி பாணியில்

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவங்களையடுத்து, ஈரோட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A man has been arrested for showing video and raping collage girl in Erode.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X