"சுதா.. உன்னை மறக்க முடியலை.. பார்க்கணும்".. நம்பி சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது!
கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு: "சுதா.. உன்னை பார்க்கணும்.. மறக்க முடியலை.." என்று சொன்னதை கேட்டு நம்பி சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்!
ஈரோடு அருகே கதிரம்பட்டியை சேர்ந்த தம்பதி காளிமுத்து - சுதா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். காளிமுத்து ஒரு தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்க்கிறார், சுதா மேட்டுக்கடையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக சுதா வேலைக்கு போகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைகள் ஸ்கூலுக்கும், காளிமுத்து வேலைக்கும் போய்விட்ட நிலையில் சுதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் வேலை முடித்து வந்து பார்த்தால் சுதாவை காணோம். எங்கு போனார் என்று தெரியாததால் அவரை காளிமுத்து உட்பட சொந்தக்காரர்கள் தேட ஆரம்பித்தனர்.
என்னது.. ஏசிஎஸ் தோற்றதற்கு இவர்தான் காரணமா?.. லிஸ்ட்டுலேயே இல்லாத செம டிவிஸ்ட்!
ரத்த வெள்ளம்
இந்தநிலையில் இரவு 10.15 மணிஅளவில் கதிரம்பட்டியில் உள்ள ஒருகாலி கிரவுண்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உள்ளார் என்ற தகவல் பரவியதால், காளிமுத்து அங்கு ஓடினார். அங்கு சுதா, ரத்தக்கறையுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இப்போது சுதாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
செல்போன் கடை
இது சம்பந்தமாக ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில் முதல்கட்டமாக சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. சுதாவுக்கு தான் வேலைப்பார்த்த செல்போன் கடை ஓனர் கோகுல் மீது கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு வருடமாக இருந்திருக்கிறது. ஆனால் சுதா வேறு யாரிடமோ போனில் பேசி வந்ததாகவும், இதனால் கோகுலுக்கு ஆத்திரம் வந்து சுதாவுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மறக்க முடியலை
இந்த ஆத்திரத்தில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதாவை வேலையிலிருந்து கோகுல் நீக்கி உள்ளார். வேலையை விட்டு நிறுத்தினாலும் சுதாவை மறக்க முடியவில்லை. அதனால்தான், "சுதா.. உன்னை பார்க்கணும்.. மறக்க முடியவில்லை" என்று சொல்லவும், அதை நம்பி சுதா சென்றுள்ளார்.
உண்மை காரணம்?
அப்போதுதான், மீண்டும் தகராறு வந்து ஆத்திரமடைந்த கோகுல், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, இப்போது போலீசார் பிடியில் கோகுல் சிக்கி உள்ளதால் விசாரணை நடக்கிறது. இதன் பின்னரே, இந்த சம்பவத்துக்கான முழு காரணம் தெரியவரும்!