கட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்!
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நடந்துள்ளது
Recommended Video
ஈரோடு: ஈரோடு மினி பஸ் ஸ்டாண்டில்.. இளம் ஜோடிகள் போதையில் ஜாலியாக இருந்த சம்பவம் நேரில் பார்த்த பொதுமக்களை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஈரோடு மினி ஸ்டாண்டில்.. சில ஜோடிகள் சுற்றி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. பஸ் ஏற போவது மாதிரியும், வழியனுப்ப வருவது மாதிரியும் உள்ளே புகுந்து விடுகிறார்களாம்.
பிறகு, நீண்ட நேரத்துக்கு பஸ் ஸ்டேண்டிலேயே சில்மிஷத்திலும் ஈடுபட்டு விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பஸ் ஸ்டேண்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த காட்சியை கண்டு அந்த பகுதி மக்களே கடுப்பாகி விட்டனர்.
இரவு 11 மணி அளவில் இளைஞனும், ஒரு இளம்பெண்ணும் வந்துள்ளனர். இருவருமே அளவுக்கு அதிகமான போதையில் இருந்திருக்கிறார்கள். பிறகு திடீரென அந்த பஸ் ஸ்டேண்டிலேயே படுத்து கொண்டுள்ளனர். இதையடுத்து எல்லை மீறவும் ஆரம்பித்துள்ளனர்.
ஆட்கள் யாரும் இல்லை என்று நினைத்து... கட்டிப்பிடித்தும், முத்தம் தந்தும்.. வரம்புகள் மீறப்பட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவருமே ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதை வெளியூர் போய்விட்டு பஸ்ஸில் வந்து இறங்கிய சில பயணிகளே நேரடியாக கண்டு, முகம் சுளித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பொது இடங்களில் இப்படி எல்லைமீறல்கள் நடக்காத வண்ணம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இவைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.