55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை!
கள்ளக்காதலியை கழுத்து அறுத்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு: 55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு கள்ளக்காதல் தேவைதானா? வெறும் 7500 ரூபாய் கடனுக்காக தேவியின் கழுத்தை நெறித்து கொலையே செய்துவிட்டார் இளைஞர்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் தேவி. வயசு 55. கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டணத்தை சேர்ந்தவர்.
சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தார். இவரது கணவர் பெயர் சுரேஷ். லாரி கிளினராக உள்ளார். அடிக்கடி வேலைக்கு லாரியில் வெளி மாநிலத்துக்கு இவர் போய் விடுவார்.
காலி மதுபாட்டில்
அதனால் தேவி பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேவி சடலமாக கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விசாரணை ஆரம்பமானது.
தனிப்படை
இதுதொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். தேவி சடலத்துக்கு பக்கத்தில் ஒரு காலி மது பாட்டில் கிடந்தது. அப்போதுதான் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது எல்லா உண்மையும் வந்தது.
ராமகிருஷ்ணன்
55 வயசு தேவியுடன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயது இளைஞனுக்கு கள்ள உறவு இருந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் கரும்பு வெட்டும் வேலை பார்ப்பவராம். இவர்களுக்குள் பண விஷயத்திலும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் தேவி இவரிடம் ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். சம்பவத்தன்று இருவரும் தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளனர்.
வாக்குவாதம்
அந்த சமயத்தில், கொடுத்த 7500 ரூபாய் கடனை ராமகிருஷ்ணன் கேட்க, பணம் இல்லை என்று தேவி சொல்ல.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது. பிறகுதான் ஆத்திரத்தில் ராமகிருஷ்ணன் அரிவாளால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.