ஆசை காட்டி மோசம் செய்த கேரளத்து அர்ச்சனா.. ஏமாந்து போன சாம்பிராய்ட்.. கடைசியில் நடந்த விபரீதம்!
காதல் தோல்வியால் ஈரோடு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஈரோடு: நர்ஸ் அர்ச்சனா இப்படி ஆசை காட்டி மோசம் செய்வார் என்று சாம்பிராய்ட் கொஞ்சமும் நினைக்கவே இல்லை.. அதனால் ஒரு உயிரே இன்று பறிபோய்விட்டது!
ஈரோடு அருகேயுள்ள கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாம்பிராய்ட்... இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
மெடிக்கல் ரிப்ரசென்டேடிவ் என்பதால், ஒரு நாளைக்கு நிறைய டாக்டர்களை சந்திக்க வேண்டி இருக்கும்.. அப்போது தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்ய கேட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று வரவும் கூடும்.
அப்படித்தான், ஈரோடு பெருந்துறையிலுள்ள ஒரு தனியார் மகப்பேறு நிலையத்திற்கு சென்று வந்தார். அங்கு வேலை பார்த்தவர் நர்ஸ் அர்ச்சனா. இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது... அது காதலாகவும் வளர்ந்தது.
அர்ச்சனா, கேரளாவை சேர்ந்தவர்.. அவரும் சாம்பிராய்டை விரும்பினார்.. ஆனால், நாளடைவில் அவரை விட்டு அர்ச்சனா மெல்ல விலக ஆரம்பித்தார்.. இதனால் சாம்பிராய்ட் அர்ச்சனாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.. ஆனால், அவரோ கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டார்.. தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், இனிமேல் தன்னை தேடி வரவேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.
டிடிவி தினகரனுக்கு புதுப் பெருமை.. வாண்டையார் குடும்பத்து சம்பந்தி.. யார் இந்த பூண்டி வாண்டையார்?
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாம்பிராய்ட் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.. ஒருகட்டத்தில் அர்ச்சனா இப்படி ஏமாற்றியதை தாங்கி கொள்ள முடியாமல் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. மறுநாள் காலை கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காதது கண்டு, அவரது அப்பா சாம்சன் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்.
அப்போது மகன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அலறி அழுதார்.. ஈரோடு தெற்கு போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்து சென்றனர்.