இதய நோயால் உயிருக்கு போராட்டம்.. பாவம் 10 மாத குழந்தை.. அவசர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்!
சென்னை: மிக மிக மோசமான இதய நோயால் 10 மாதத்திலேயே போராடும் பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்!
லோகேஷ், கீதா ராணி தம்பதியின் அழகிய 10 மாத குழந்தைதான் லட்சுமி சாய். பிறந்ததில் இருந்து லட்சுமி சாய் மிகவும் சந்தோசமாக சுற்றி, ஆடிக்கொண்டு இருந்தாள். தன்னுடைய அழகிய சிரிப்பால் எல்லோரையும் அவர் மயக்கிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் போக போகத்தான் அந்த அழகிய சிரிப்பிற்கு பின் ஒரு சோகம் இருப்பது தெரிந்தது. ஆம், சில வாரங்களுக்கு முன்தான் லட்சுமி சாயிற்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிந்தது. சென்னையில் லட்சுமி சாயுக்கு பல இடங்களில் சிகிச்சை செய்தோம் .
ஆனால் எங்குமே சரியாக சிகிச்சை கிடைக்கவில்லை . எங்கள் மகளுக்கு புல்மோனரி அட்ரேசியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் Pulmonary Atresia, Large Conotruncal VSD, Small confluent Branch PAs, Two MAPCAS from descending aorta, Right arch with mirror branching, Dilated aortic root and ascending aorta, Intact IAS, என்று அழைப்பார்கள்.
இதையடுத்து எங்கள் மகளை உடனே திருப்பதி மியாட் மருத்துவமனையில் இருந்து சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தோம். எங்கள் குழந்தையை காக்க வேண்டும் என்றால் உடனே அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்.
இதை Aorta pulmonary shunt + Unifocalisation of MAPCA ஆபரேஷன் என்று அழைப்பார்கள். இந்த சிகிச்சையை மேற்கொள்ள 2,10,000 தேவைப்படலாம் . அதேபோல் ஐசியூ செலவு, தங்கும் செலவு, சிகிச்சைக்கு பின் மருந்து செலவு என்று நிறைய செலவு ஆகும்.
ஆனால் நான் விவசாயம் செய்யும் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். என்னால் என் குழந்தைக்கு அவ்வளவு செலவு செய்து சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் உதவினால் மட்டுமே எங்களின் மகள் உயிரை காக்க முடியும்.
லட்சுமி சாய் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் லட்சுமி சாய் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES