உயிருக்கு போராடும் 15 நாள் பச்சிளம் குழந்தை.. உங்கள் உதவி தேவை
சென்னை: இதய குறைபாட்டால் உயிருக்கு போராடும் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு உதவி செய்யுங்கள்!
சித்தூர் அருகே இருக்கும் பிச்சத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி மற்றும் சுவாதி. பாலாஜி விவசாயம் செய்து வருகிறார். சுவாதி வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மிக தாமதமாகவே குழந்தை பிறந்தது.
திருமணம் ஆகி 5 வருடம் காத்து இருந்த பின் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போது எடுக்கப்பட்ட ஸ்கேனிலேயே அந்த குழந்தைக்கு உடலில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் முடிந்த அளவு ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க அவர்கள் இருவரும் முடிவு செய்தனர்.
திருப்பதியில் இருக்கும் ஸ்ரீநிவாஸா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சி செக்சன் செய்து குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் உடல்நிலை பிறந்தவுடன் மோசமானது. மூச்சு சரியாக விட முடியாமல் குழந்தை உயிருக்கு போராடியது. இதையடுத்து உடனடியாக குழந்தையை சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை பிறந்து தற்போது 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Truncus Arteriosus எனப்படும் பிறப்பிலேயே இதயத்தில் ஏற்படும் குறைபாடு அந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் எடையை பொறுத்து, இன்னும் 4 அல்லது 6 வாரங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த குழந்தைக்கு RV-PA tissue valve conduit சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்த குழந்தைக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் குழந்தையின் பெற்றோரிடம் பணம் இல்லை. குழந்தையின் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் குழந்தையின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES