விபத்தால் நிலைகுலைந்த வாழ்க்கை.. உயிருக்கு போராடும் 9 வயது சிறுவன்.. ப்ளீஸ் உதவுங்கள்!
விபத்தால் கையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு நீங்கள் உதவினால் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
சென்னை: விபத்தால் கையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு நீங்கள் உதவினால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
என் பெயர் செந்தில். என்னுடைய 9 வயது மகன் தர்ஷனின் சிகிச்சைக்காக நான் உங்களிடம் உதவி கேட்கிறேன். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு வாகன விபத்து ஏற்பட்டது.
அதில், அவனுடைய கை உடைந்தது, இதனால் இடது கையில் இருக்கும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்தால்தான் அவனின் நரம்புகளை சரி செய்து கையின் செயல்பாட்டை மீட்க முடியும். அவனின் எலும்புகளும் உடைந்தது.
அவன் தற்போது கோவையில் உள்ள கனகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். அவனின் சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் தேவை. என்னிடம் சேர்த்து வைத்து இருந்த 4 லட்சம் ரூபாயை சிகிச்சைக்கு கொடுத்துவிட்டேன். இன்னும் 3.5 லட்சம் ரூபாய் தேவை.
நானும் என் மனைவியும் கொடைக்கானல் காட்டேஜில் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு மாத சம்பளம் 11 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். எங்கள் சேமிப்பை எல்லாம், என்னுடைய மகனின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம். இனி நீங்கள் உதவினால் மட்டும் என் மகனை காப்பாற்ற முடியும்.
தர்ஷனை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் தர்ஷனை காப்பாற்ற விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES