For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிருக்கு போராடும் இலங்கை தமிழர்.. அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும்.. கொஞ்சம் உதவுங்களேன்!

விசித்திரமான கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இவருக்கு நீங்கள் கொஞ்சம் உதவி செய்தால் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியும்.

சென்னை: விசித்திரமான கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இவருக்கு நீங்கள் கொஞ்சம் உதவி செய்தால் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியும்.

இலங்கை சேர்ந்த தமிழர் ஜோசப் விநாயக மூர்த்தி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் இலங்கை போரால் மோசமாக பாதிக்கப்பட்டது.

இலங்கை போரில் இவர் கடுமையாக காயம் அடைந்து பாதிக்கப்பட்டார். அதேபோல் இவரின் வீடும் அந்த போரில் தரை மட்டமாக்கப்பட்டது. இவரின் வருமானமும் போய் மொத்த குடும்பமும் வறுமைக்கு சென்றது.

இந்த போருக்கு பின் இன்னும் அவரின் குடும்பம் வறுமையில் இருந்து மீளவில்லை. 10 வருடமாக இவர்கள் போரால் ஏற்பட்ட வறுமையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோசப் விநாயக மூர்த்தி வயிற்றில் விசித்திரமான கட்டிகள் தோன்றி இருக்கிறது.

Stoma problem என்று அழைக்கப்படும் இந்த கட்டிகள் அவரின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வருகிறது. இதனால் அவரின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். தற்போது அவர் அந்த கட்டியை நீக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இவருக்கு சிகிச்சை அளிக்க அதிகம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால் இவருக்கு நீங்கள் நினைத்தால் பொருளாதார உதவி செய்ய முடியும். நீங்கள் பணம் கொடுத்தால் இவருக்கு உடனடியாக சிகிச்சை செய்து உயிரை காக்க முடியும்.

குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடும் இந்த இலங்கை தமிழருக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.. இவருக்கு உதவ நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X