இதய நோயினால் அவதிப்படும் 3 வயது சிறுமிக்கு உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: கோபாலா தேஜஸ்வினி என்ற 3 வயது சிறுமிக்கு DTGA பிரச்சினை உள்ளது. இதய நோயான இதை குணப்படுத்த அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாம்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூரு என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் நாகார்ஜுனா மற்றும் முனிகுமாரிக்கு பிறந்த மூன்றாவது குழந்தை கோபல்லா தேஜஸ்வானி. அவர்களின் மூத்த மகன் சோன் பாரத் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 11 வயதாகிறது. பள்ளிக்குச் செல்கிறார். இரண்டாவது மகள் தீட்சித், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். 9 வயதாகும் அவர், படுத்த படுக்கையாக உள்ளார்.
நாகார்ஜுனா ஒரு விவசாயத் தொழிலாளி, மூன்று குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளதால், அவரது மனைவி வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கிறார். இந்த தம்பதியின் 3 வயது மகள்தான் கோபாலா தேஜஸ்வினி.
திருப்தியில் உள்ள MIOT மருத்துவமனையை முதலில் மகளுடன் அனுகிய நாகார்ஜுனா, பிறகு சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்ப்டடார்.
கொரோனா முடக்கத்தால் பொது போக்குவரத்து இல்லை என்பதால், டி.வி.எஸ் எக்செல் ஒன்றில் 190 கி.மீ தூரம் பயணித்து, மியாட் மருத்துவமனையில் கோபாலா தேஜஸ்வினியை அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் நாகார்ஜுனா.
இன்று சிறுமிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே தாமதமின்றி நிதி திரட்ட தேவையுள்ளது. தயவுசெய்து உதவுங்கள்.
RECOMMENDED STORIES