ஒரு வயது பெண் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. உதவுங்களேன்
ஒரு வயது குழந்தை நிந்திர மோக்ஷிதாவின் இதய அபரேசனுக்கு உதவுங்கள், இதய நோயினால் போராடும் இந்த சிறுமி மருந்துகளின் உதவியோடு வாழ்ந்து வருகிறாள்.
சென்னை: நிந்திர மோக்ஷிதா அக்டோபர் 25 ஆம் தேதி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியிக்கிறார். அந்த குழந்தை ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ உங்களின் உதவி தேவை. இதயநோயுடன் போராடும் குழந்தைகக்கு இதய ஆபரேசன் செய்ய வேண்டியுள்ளது.
கன்னியா மற்றும் லீலவதிக்கு முதல் குழந்தையான நிந்திர மோக்ஷிதா , திருப்பதி அரசு மருத்துவமனையில் பிறந்தார். பிறக்கும் போது நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருந்த குழந்தைக்கு 5 வது மாதத்தில் அவளுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருதய பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். ஸ்கேனுக்காக திருவள்ளூருக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர். சிறுமியின் உடல்நிலை குறித்து அறிக்கை அளித்தனர்.
ஒரு மாதத்திற்கு ஒரு முறை பேட்யாட்ரிக் கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மோக்ஷிதா தற்போது மருந்துகளின் உதவியோடு வாழ்ந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. இனியும் அறுவை சிகிச்சையை ஒத்திவைப்பது இனி எளிதல்ல.
பெரிய பெரிமெம்பிரானஸ் வி.எஸ்.டி, இருதரப்பு ஷன்ட், கூடுதல் தசை வி.எஸ்.டி கள், கடுமையான நுரையீரல் ஸ்டெனோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அறுவை சிகிச்சை, ஐ.சி.யூ மற்றும் மருத்துவமனையில் தங்குவது, மருந்துகள் உட்பட ரூ .2,60,000 செலவாகும். குழந்தையின் தந்தை இயந்திர ஆபரேட்டராக பணிசெய்து வருகிறார். அவரால் இந்த செலவை சமாளிக்க முடியாது என்பதால் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் சிறு உதவி இந்த குழந்தையின் உயிரை காப்பாற்றும்.
RECOMMENDED STORIES