துருதுருவென விளையாட வேண்டிய வயதில் இதய பிரச்சினை.. 4 வயது குழந்தை கார்த்திக்கு உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: மிக மிக மோசமான இதய நோயால் 4 வயதிலேயே போராடும் சிறுவன் கார்த்திக்கிற்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்!
கார்த்திக்கிற்கு தற்போது 4 வயது ஆகிறது . அவன் குழந்தையாக இருந்த போது இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Tetrology of Fallot எனப்படும் இதயம் தொடர்பான மோசமான நோய் அவனை தாக்கி இருந்தது. 2016ல் இந்த நோய் குறித்து கண்டுபிடிக்கப்பட்டது.
அவன் வளர வளர அவனுக்கு மூச்சு விடுவது சிரமம் ஆனது. இதனால் அவனால் சரியாக சாப்பிட முடியவில்லை. அதேபோல் அவனால் சரியாக பால் போன்ற திரவ பொருட்களை கூட குடிக்க முடியவில்லை.
பல நாட்களாக இவன் மூச்சு விட முடியாமல் திணறி வந்தான். அதன்பின் அவனை சோதனை செய்ததில் அவனுக்கு adenoid hypertrophy இருந்தது தெரிய வந்தது. இதனால் அவனை இஎன்டி மருத்துவ பிரிவில் சோதனை செய்தோம் .
இதனால் மியாட் மருத்துவமனையில் (MIOT Hospitals) கார்த்திக் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். அப்போதுதான் அவனுக்கு adenotonsillar Hypertrophy with obstructive sleep apneoea (OSA), bilateral otitis media என்று மூன்று முக்கியமான நோய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவனால் மூச்சு விட முடியவில்லை. அவனால் சரியாக பேச, கேட்க முடியவில்லை. இதனால் அவனுக்கு உடனடியாக endoscopic coblation adenoidectomy/tonsillectomy and bilateral myringotomy ஆகிய சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.
இந்த சிகிச்சையை மேற்கொள்ள மொத்தமாக அனைத்து செலவையும் சேர்த்து ரூபாய் 2,00,000/- தேவை. ஆனால் இவ்வளவு செலவு செய்ய கார்த்திக் பெற்றோரிடம் பணம் இல்லை. நீங்கள் உதவினால் மட்டுமே இவனின் உயிரை காக்க முடியும்.
கார்த்திக் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் கார்த்திக் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES