7 வயசு சந்துருவிற்கு மூளையில் கட்டி.. 3 லட்சம் தேவை.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன்
மூளை கட்டியால் அவதிப்பட்டு வரும் 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சென்னை: மூளை கட்டியால் அவதிப்பட்டு வரும் 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
7 வயதே நிரம்பிய சந்துரு ஸ்ரீ brain tumor எனப்படும் மூளை கட்டி வந்து சிகிச்சை பெற்று வருகிறார். நீலபூரை சேர்ந்த இந்த சிறுவன் மூளை கட்டி காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார். இவரின் அப்பா தினக்கூலி பணியில் இருக்கிறார். இவரின் அம்மா ஆசிரியராக உள்ளார்.
இவர்கள் குடும்பம் நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தது. ஒருநாள் சந்துரு வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த போது கீழே மயங்கி விழுந்தான். அதன்பின் வரிசையாக வாந்தி எடுத்தான். இதையடுத்து உடனே சந்துருவை மருத்துவமனையில் சேர்த்து சோதனை செய்தனர்.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இவனை சோதித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.இதனால் ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதித்து அவனுக்கு சோதனை செய்தனர். இந்த சோதனையில் சந்துருவிற்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறு வயதில் இருந்து மிக சுறு சுறுப்பாக வளர்ந்து, ஜாலியாக இருந்த சிறுவன்தான் சந்துரு. இந்த நிலையில் மூளை கட்டி காரணமாக தற்போது மருத்துவமனையில், சந்துரு முடங்கி கிடக்கிறான். இவனின் சிகிச்சைக்கு 5 லட்சம் தேவை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதற்காக ஏற்கனவே கொஞ்சம் பணத்தை சந்துருவின் பெற்றோர் கடன் வாங்கி கட்டிவிட்டனர். இனி மீது பணத்தை கட்ட முடியாமல் சந்துருவின் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.
சந்துருவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சந்துரு உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் சந்துரு உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES