ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

Google Oneindia Tamil News

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது.

2 Children drowned in lake in Sulagiri, Krishnagiri

எனினும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிப்படலாம் என்றும் அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் சூளகிரி அடுத்த அனாசந்திரம் ஏரியில் கரைக்கப்பட்டன.

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்.. காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு முடிவு!காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்.. காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு முடிவு!

அப்போது நீச்சல் தெரியாத சூளகிரியை சேர்ந்த முரளி (12), பூபதி(13) ஆகிய இருவர் விநாயகர் சிலையை கரைக்க ஏரியில் இறங்கியபோது மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

English summary
2 children drown in lake while they were tried to dissolve Vinayagar statues in Sulagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X