1 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஆறுதலாக ரூ20 வரை விற்பனை- வீணாக்கிய விவசாயிகள் வேதனை
ஓசூர்: ஓசூர் பகுதிகளில் தக்காளி கிலோ 1 ரூபாய்க்கு விற்றதால் அவற்றை தோட்டங்களிலேயே ஆடு, மாடுகள் மேய்க்க விட்டனர். இப்போது ஒரு கிலோ தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளதால் அந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Recommended Video
ஓசூர் பகுதிகளில் கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளும், கீரை உள்ளிட்டவைகள் என விவசாயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாத இறுதி முதல் விவசாய பொருட்களின் விலை மிகவும் குறைந்து கேட்பதற்கே ஆளில்லை என்கிற சூழல் ஏற்பட்டதால், தக்காளி விவசாயிகள் உரிய விலையின்றி ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொட்டியும், பல இடங்களில் தோட்டங்களிலேயே வீணாகி வந்தன. ஆனால் இரண்டு நாட்களாக ஒரு ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை 15 முதல் 20 ரூபாய் விற்கப்படுவதால் தற்போது தக்காளியை அறுவடை செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி என்றாலும், தக்காளி விலைக்கிடைக்காதோ என பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்காக தோட்டங்களை உழவு செய்து, ஆடு மாடுகளுக்கு தீவனமாக விட்ட தக்காளி விவசாயிகள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
2-வதாக வாக்கப்பட்ட அலி.. நெருங்காமல் தவிர்த்த மனைவி.. ஜன்னல் வழியாக தீ வைத்து கொளுத்தி.. சென்னை ஷாக்