மக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது
ஓசூர்: தொகுதி மக்களின் குறைதீர்க்க மை எம்.எல்.ஏ. ஓசூர் https://t.me/mymlahosur என்ற டெலிகிராம் குழு தொடங்கப்பட்டுள்ளது.
ஓசூர் எம்.எல்.ஏ. சத்யாவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' https://t.me/mymlahosur டெலிகிராம் குழு செயலியை தளி எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், மக்களின் குறைகளை எம்.எல்.ஏ.வுக்கு குறைதீர்க்கும் அலுவலர் மூலமாக கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்த இது உதவும் என்றார்.
இந்த MyMLA குழுவை உருவாக்க கே.வி.நாகேஷ், வினோத் கிஷோர், திலக், ஸ்ரீதர் ராஜாராம், முகர்ஜீ, வித்யா, கருணாமூர்த்தி உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை வழங்கினர். இவர்களுக்கு எம்.எல்.ஏ. சத்யா நன்றி தெரிவித்தார்.
இதில், எம்.எல்.ஏ.விடம் தெரிவிக்க விரும்பும் குறைகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து உடனுக்குடன் பதிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக மக்களுக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் இந்த செயலி இணைப்புப் பாலமாக இயங்கும் என்பதில் மிகையில்லை.
Recommended Video
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி