கர்நாடக-தமிழக எல்லையில் காலையிலேயே கலாட்டா, மாலை 4 மணிவரை வாகனங்களுக்கு சலுகை! கிருமிநாசினி தெளிப்பு
ஒசூர்: பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
Recommended Video
"தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநில எல்லைகளும், சீல் வைக்கப்படுகிறது" என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களை திரும்பிச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென கூறினால் எப்படி? நாங்கள் அவசர வேலையாக செல்கிறோம். என்றெல்லாம் கூறி வாகன ஓட்டிகள் ஆதங்கப்பட்டார்.
இதையடுத்து, இன்று மாலை 4 மணி வரை நீங்கள் சென்று கொள்ளலாம். அதற்குப் பிறகு அனுப்ப முடியாது என்று உறுதியாக அதிகாரிகள் தெரிவித்து வாகனங்களை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். பெங்களூரை, தாண்டியதும் அத்திபெலே என்ற பகுதியில் தமிழக-கர்நாடக எல்லை புறம் உள்ளது. இங்கு தமிழகம் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இந்த மூன்றும் முக்கியம்.. இதுதான் அறிகுறி.. கொரோனா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
இதற்காக, முகக் கவசம் அணிந்த பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் அவசர தேவையாக செல்வோர் இப்பொழுதே கிளம்பி தமிழகம் சென்ற வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.