கார் விபத்து.. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உயிர் தப்பினார்
ஓசூர் அருகே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கார் விபத்துக்குள்ளானது.
Recommended Video
ஓசூர்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக உள்ளவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் ஏற்கனவே இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ஓசூர் இவரது சொந்த ஊர் ஆகும்.
இந்நிலையில், இன்று மாலை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
தின்னூர் என்ற இடத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் அமைச்சரின் கார் மீது பலமாக மோதிவிட்டது. இதில் அமைச்சரின் கார் விபத்துக்கு உள்ளானாலும் அமைச்சர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
அமைச்சரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் மற்றும் உயரதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விபத்து சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.