ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி!

Google Oneindia Tamil News

ஓசூர்: கர்நாடகாவில் இன்று 4 வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் மீறி செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    இன்று தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு கர்நாடகத்தில் அனுமதி இல்லை!

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று 4ஆவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அந்த மாநில போலீசார் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

    செம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா!செம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா!

    பயணம்

    பயணம்

    இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் மாநில எல்லைப் பகுதிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த மாநில போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்திற்கு

    தமிழகத்திற்கு

    மாநில எல்லைப் பகுதிகளில் அம்மாநில போலீஸார் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகுரக -வாகனங்களை கர்நாடக போலீஸார் தடுத்து மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    அவல நிலை

    அவல நிலை

    உத்தரவை மதிக்காமல் செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு இ பாஸ் அனுமதி பெற்று செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு அங்கு செல்பவர்கள் என அனைவரும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் மாநில எல்லைப் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    ஆனால் வழக்கம்போல தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு தொடர்ந்து பயணம் செய்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.

    English summary
    Today there will be no entry for vehicles which are coming from Tamilnadu to Karnataka. They were stopped in Aththipalli check post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X