பெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் வெடித்து சிதறியது.. ஹூப்ளியில் ஷாக்
ஹூப்ளி: கர்நாடக மாநில பெண் எம்எல்ஏ ஒருவர் பெயரில் வந்த, பாக்ஸை திறந்து பார்த்தபோது அதற்குள் இருந்த வெடிகுண்டு வெடித்து, அந்த நபரின் கை பறி போன சம்பவம் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஞ்சலி நிம்பால்க்கர். இவரது கணவர் ஹேமந்த் நிம்பால்க்கர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகும். இதே மாவட்டத்தில் அவர் முன்பு காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவர்.
இந்த நிலையில் ஹூப்ளி ரயில் நிலையத்துக்கு அஞ்சலி நிம்பால்க்கர் பெயரிட்ட ஒரு பாக்ஸ் கூரியரில் வந்துள்ளது. சந்தேகமடைந்த ரிசர்வ் படையை சேர்ந்த வீரர் ஒருவர் அதைத் திறந்து பார்த்தபோது பெரும் சத்தத்தோடு அது வெடித்து சிதறியது.
இதில் திறந்தவரின் கையில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வடிந்தது. காயமடைந்தவர் உடனடியாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்எல்ஏ அஞ்சலியை தாக்குவதற்கு திட்டமிட்டு இந்த பாக்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.