ஹைதராபாத்தில் குடிகார இளைஞர்கள் அட்டகாசம்.. போலீஸ்காரரை இறுக்கி அணைச்சி உம்மா கொடுத்து கலாட்டா!
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குடிகார இளைஞர்கள் போலீஸாரைக் கூட விட்டு வைக்காமல் அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொனாலு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.
இந்த பண்டிகையின் போது எல்லையம்மனுக்கு முதல் நாளும் கடைசி நாளும் பூஜை செய்வது வழக்கம். தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிய சாமிக்கு நன்றி சொல்லும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது.
கலாட்டா
இது காளி தேவிக்கான பூஜையாகும். இந்த பூஜையில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர்.
குடிகார இளைஞர்
அப்போது குடிபோதையில் அவ்வழியாக வருவோர் போவோரை வம்புக்கு இழுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் கையை பிடித்து இழுத்த குடிகார இளைஞர் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
ஆத்திரமடைந்த எஸ்ஐ
உடனே ஆத்திரமடைந்த எஸ்ஐ, அந்த இளைஞரை அடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். அப்படியும் அடங்காத அந்த இளைஞர் எஸ்ஐ பின்னால் ஆடிக் கொண்டே செல்கிறார்.
|
வீடியோ
நாட்டில் போலீஸார், அதுவும் ஆண் போலீஸாருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது இந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.