புருஷன் கண் முன்பாகவே.. 2 கைகளையும் கட்டி போட்டு விட்டு.. கதற கதற.. 4 பேரின் அராஜக அட்டகாசம்!
மலைவாழ் மக்களை பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
ஹைதராபாத்: 2 கைகளையும் கட்டிப்போட்டுவிட்டு, மலைவாழ் பெண்ணை அவரது கணவர் முன்பேயே கதற கதற 4 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நாசகார கும்லை கைது செய்ய கோரி மலைவாழ் மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், ஜாமின் நகர் தாண்டா பகுதியில் பெரும்பாலும் வசித்து வருபவர்கள் மலைவாழ் மக்கள்தான்.. அங்குதான் நாகேஷ் நாயக் என்பவரும் வசித்து வந்தார்.. இவரும் இவரது மனைவியும், குண்டுப்பாலம் அருகே ஒரு பங்களாவில் செக்யூரிட்டி வேலை செய்து வந்திருக்கிறார்கள்.
அதனால் இவர்களுக்கு எப்போதுமே நைட் டியூட்டிதான். சம்பவத்தன்றும் வழக்கம்போல் 2 பேரும் டியூட்டியில் இருந்தனர்.. அப்போது மணி 12 இருக்கும்.. அப்போது 2 பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது.. திடீரென நாகேஷின் கைகளை கட்டிவிட்டு அவரை சரமாரியாக தாக்கி உள்ளது.
பிறகு, நாகேஷ் கண் எதிரிலேயே அவரது மனைவியை நாசம் செய்தது.. கைகள் கட்டப்பட்ட நிலையில், நாகேஷால் அவர்களை தடுக்க முடியவில்லை.. உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் கதறினார்.. இறுதியில் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.. பாதிக்கப்பட்ட தம்பதி, நடந்த சம்பவம் குறித்து ஸ்டேஷனில் புகார் தந்துள்ளனர்.. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை போலும்.
15 ஆண்டுகளுக்குப் பின் மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை -10 மணிநேரத்தில் 250 மி.மீ பதிவு!
அதனால், மலைவாழ் மக்கள் கொந்தளித்துவிட்டனர்.. அந்த 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, ஆவேசத்துடன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்... நடவடிக்கை எடுக்காவிட்டால், உயரதிகாரிகளிடம் முறையிடுவோம் என்று போலீசாருக்கு எச்சரித்தனர். இதற்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தந்தனர்.
இதனிடையே, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை, மெடிக்கல் செக்கப்புக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. படுகாயமடைந்த கணவரையும் போலீசார்ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.