வாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்!
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஷோபனா ஆவேசம் அடைந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: "இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தையும் கேன்சல் செய்துவிட்டு, ஓட்டுப்போட ஆசை ஆசையாக வந்தால், வாக்காளர் பெயரில் என் பேரே இல்லை.. இது எவ்வளவு பெரிய தப்பு.. யாரை முட்டாளாக்க பாக்கறாங்க" என்று கொதித்து போய் கேள்வி எழுப்புகிறார் ஆந்திர அப்போலோ மருத்துவமனை தலைவரின் மகள் ஷோபனா!
நாடு முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலையிலிருந்து தொடங்கி நடக்கிறது. அதாவது 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்து வருகிறது.
இத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது.
ஷோபனா
இன்று வாக்குபதிவு என்பதால் ஆந்திராவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா வந்திருந்தார். இவர் ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தவர். வாக்களிப்பதற்காக அதனை கேன்சல் செய்துவிட்டு வெளிநாட்டிலிருந்து வந்தார்.
அதிர்ச்சி
அதன்படி வாக்குபதிவு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு ஷோபனா வந்துவிட்டார். ஆனால் அங்கே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று சொன்னார்கள். பெயர் இல்லாததால் ஓட்டு போடவும் முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார் ஷோபனா.
மோசமான நாள்
உடனடியாக இது சம்பந்தமாக பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் "என் வாழ்க்கையியே இன்றைய நாள் மோசமான நாள். ஒரு இந்திய குடிமகளாக நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன். நான் ஓட்டு போடறதுக்காக வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் என் வாக்கு நீக்கப்பட்டிருக்கிறது.
முட்டாள் ஆக்குகிறார்கள்
என் வாக்கு எனக்கு முக்கியம் இல்லையா? யார் இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்? இந்திய குடிமகளாக எனக்கு எதிராக இது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம். இதை என்னால் எப்படி பொறுத்து கொள்ள முடியும், முடியவே முடியாது" என்று ஆவேசமாக பேசி உள்ளார்.