சந்திரபாபு நாயுடுவை விட அவரின் 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்: எவ்வளவு சொத்து தெரியுமா?
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் 3 வயது பேரனுக்கு ரூ. 18.71 கோடி சொத்து உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது குடும்ப சொத்து மதிப்பை ஆண்டு தோறும் தாமாக முன்வந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை அவரின் மகன் நர லோகேஷ் நேற்று மாலை வெளியிட்டார்.
அதன்படி நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 81.83 கோடி ஆகும். கடந்த ஆண்டு ரூ. 69.28 கோடியாக இருந்த சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் ரூ. 12.55 கோடி அதிகரித்துள்ளது.
நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ. 2.53 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்ந்துள்ளது. அவரின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 25 கோடியில் இருந்து ரூ. 31 கோடி ஆகியுள்ளது. நாயுடுவின் மகனும், அமைச்சருமான நர லோகேஷனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ. 15.21 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 21.40 கோடியாக அதிகரித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு.. பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
லோகேஷின் மனைவி பிராமினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 15.01 கோடியில் இருந்து ரூ. 7.72 கோடியாக குறைந்துள்ளது. லோகேஷின் 3 வயது மகன் தேவான்ஷின் சொத்து மதிப்பு ரூ. 11.54 கோடியில் இருந்து ரூ. 18.71 கோடியாக உயர்ந்துள்ளது. நாயுடுவை விட அவரின் பேரன் 6 மடங்கு பணக்காரராக உள்ளார்.