அதிர்ச்சியில் மக்கள்.. ஆந்திராவை உலுக்கிய கொரோனா.. ஒரே நாளில் 10,000+ கேஸ்கள்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 234114 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தமாக 977575 பேர் சென்னையில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!
ஆந்திரா நிலைமை
தமிழகத்தில் இப்படி 6000-7000 கேஸ்கள் தினமும் வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஆந்திராவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.அங்கு மொத்தமாக 63771 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.
எத்தனை பேர்
ஆந்திராவில் மொத்தமாக 55406 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இன்று மட்டும் 2784 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று ஆந்திராவில் 65 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக ஆந்திராவில் 1213 பேர் பலியாகி உள்ளனர்.
கோதாவரி எப்படி
ஆந்திராவில் மிகவும் அதிகமாக கிழக்கு கோதாவரியில் 1676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனந்தபூர் பகுதியில் 1371 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குண்டூரில் 1124 பேருக்கு 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கர்நூலில் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏன் இப்படி
கடந்த சில தினங்களாக ஆந்திராவில் தினமும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. இது போக போக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நாளில் இன்று 10 ஆயிரம் கேஸ்கள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 70584 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இப்படி திடீரென அதிகரிக்கப்பட்ட சோதனைகள்தான் கேஸ்கள் அதிகரிக்கவும் காரணம் என்கிறார்கள்.