நடுரோட்டில்.. தாசில்தாரையே அரைமணி நேரம் அலறவிட்ட பசு மாடு இதுதான்.. காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க!
தாசில்தாரை அரை மணி நேரம் விரட்டி துரத்திய பசுமாட்டின் வீடியோ வைரலாகிறது
ஹைதராபாத்: தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்தி துரத்தி விரட்டி உள்ளது.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் வானபர்த்தி பகுதியில் உள்ளது பிரஜ வைத்திய சாலை.. இந்த ரோட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தாசில்தார் அந்த பக்கமாக காரில் சென்றிருக்கிறார்.
ஆனால், இதை பார்த்த பசுமாடு காரில் சென்றவரை விரட்டி கொண்டே போனது.. ஆரம்பத்தில் காருக்குள் இருந்த தாசில்தார் இதை சரியாக கவனிக்கவில்லை.. கார் கொஞ்ச தூரம் போன பிறகுதான் தாசில்தாருக்கு தன்னை பசுமாடு துரத்தி வந்தது தெரிந்துள்ளது.
இப்படியே அரைமணி நேரம் விடாமல் அவரை துரத்தி சென்றது.. காரை நிறுத்திவிட்டால், பசு மாடும் துரத்தி வருவது நின்றுவிடும் என்று நினைத்து, காரையும் நிறுத்திவிட்டார்.. ஆனால் அந்த மாடு, காருக்கு முன்பு போய் வழிமறித்து நின்று கொண்டது.. இதனால் காரை எடுக்க முடியாமல், அடுத்த சிக்கல் உருவானது.
ச்சீச்சீச்சீ... விஏஓ வித்யாவுக்கும், ஊராட்சி தலைவருக்கும் கள்ள காதலாம்.. சிறைபிடித்த சிவகங்கை மக்கள்
மறுபடியும் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினால், அப்போது மறுபடியும் காரை துரத்தி கொண்டு ஓடுகிறது பசுமாடு.. இதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்துவிட்டனர்.. இதை பற்றி உள்ளூர் வாசிகள் சொல்லும்போது, "அந்த பசு தங்கியிருந்த கொட்டகையை இந்த தாசில்தார் தான் வேற இடத்துக்கு மாற்றிவிட்டாராம்.. அதனால்தான், பசுவானது அவரை விடாமல் துரத்துகிறது என்றனர்.
ஆனால் தாசில்தார் இதை பற்றி சொல்லும்போது, "அந்த பசுக்கு ரொம்ப பாசம்.. அதனாலதான் இப்படி துரத்திட்டு வந்தது.. இதே பசுமாடு, நிறைய பேரை இப்படித்தான் துரத்திட்டு வந்தது.. கொட்டகை எல்லாம் வேற இடத்திற்கு மாற்றப்படவில்லை"என்றார்.
ஆனால், உண்மையிலேயே எதுக்காக தாசில்தாரை இப்படி துரத்தி சென்றோம் என்று அந்த பசுமாட்டுக்குதான் தெரியும்.. இருந்தாலும் அரை மணி நேரம் தாசில்தாரையே கதற விட்ட அந்த பசுமாடுதான் சோஷியல் மீடியாவில் ஹைலைட்டாகி வருகிறது.