ஒவ்வொரு தாயின் தெய்வீக உணர்வு இது.. மோடி- அம்மா படத்தை வெளியிட்டு தமிழிசை நெகிழ்ச்சி
ஹைதராபாத்: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் குழந்தை ராமர் சாமியை நெடுஞ்சான் கிடையாக பிரதமர் நரேந்திர மோடி தரையில் விழுந்து வணங்கினார். இதை பிரதமர் மோடியின் தாய் டிவியில் பார்க்கும் புகைப்படத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு தாயின் தெய்வீக உணர்வு இது என்று நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று அவரது பக்தர்கள் பல்லாண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில், இந்த விழாவில் தலைமையேற்று அடிக்கல் நாட்டிய பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
அயோத்தியில் இன்று ராம்ஜென்பூமியில் குழந்தை ராமர் சாமியை பிரதமர் நரேந்திர மோடி நெடுஞ்சான் கிடையாக தரையில் விழுந்து வணங்கினார். இதை பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி டிவியில் பார்க்கும் புகைப்படத்தை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பகிர்ந்துள்ளார். அதில் 'ஒவ்வொரு தாயின் தெய்வீக உணர்வு இது ' என்று நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ட்விட்டர்வாசிகள், உணர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த காட்சி என்றும், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்றும் பதிவிட்டுள்ளார்கள்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு!!