20 வருடத்தில்... காலா பார்த்தேன்.. அதுக்குப் பிறகு இப்பத்தான்.. தமிழிசை புளகாங்கிதம்
Recommended Video
ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு படம் பார்த்துள்ளார். அதுகுறித்து டிவீட் போட்டு சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜக தலைவராக தமிழகத்தில் அரசியல் அரங்கை எப்போதும் பிசியாக வைத்திருந்தவர் தமிழிசை. திடீரென ஒரு நாள் அவரை ஆளுநராக்கி தெலங்கானாவுக்கு அனுப்பி வைத்தது மத்திய அரசு. அன்று முதல் பாஜகவில் பெரும் வெற்றிடம் நிலவி வருகிறது. தமிழக மக்களுக்கும் கூட தமிழிசை என்ற சிறந்த அரசியல்வாதியை மிஸ் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநராக கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழிசை. தொடர்ந்து டிவிட்டரிலும் பிசியாகவே உள்ளார். இந்த நிலையில் தமிழிசை ஒரு படம் பார்த்துள்ளார். அது தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி நடித்த படம்.
In the past 20 years I watched #Kaala, now it is #SyeraaNarashimaReddy. Megastar Chiranjeevi's efforts in bringing historic epic of freedom struggle is praiseworthy. Appreciations to your kind heart for ur vision on Nation's historical freedom struggle which is need of the hour pic.twitter.com/A9OsM2wfaJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 9, 2019
இந்தப் படம் குறித்து தமிழிசை போட்டுள்ள டிவீட்டில், கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த படம் காலாதான். அதற்குப் பிறகு இப்போது சைரா நரசிம்ம ரெட்டி பார்த்துள்ளேன். ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையை தத்ரூபமாக கொண்டு வ ர மெகா ஸ்டார் சிரஞ்சீவி எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன, பாராட்டுக்குரியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுதந்திரப் போராட்டம் குறித்து இப்போதைய நிலையில் திரைக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் தமிழிசை.