சீனா மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு சல்யூட் அடித்து பிரியாவிடை தந்த பிஞ்சு மகன்
ஹைதராபாத்: சீனாவுடனான மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவின் உடலுக்கு அவரது 4 வயது பிஞ்சு மகன் சல்யூட் அடித்து இறுதி மரியாதை செலுத்தியது நெஞ்சை கனக்க வைத்தது.
லடாக்கின் கிழக்கு எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபுவின் உடல் ஹைதராபாத் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.
Recommended Video
இதன்பின்னர் சந்தோஷ்பாபுவின் உடல் சொந்த ஊரான சூர்யபேட் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சந்தோஷ்பாபுவுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சூர்யபேட் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சீனாவுடனான கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் 76 ராணுவ வீரர்கள் படுகாயம்- மருத்துவமனையில் சிகிச்சை
சந்தோஷ்பாபுவின் உடலுக்கு ராணுவ வீரர்கள் முழு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். அப்போது சந்தோஷ்பாபுவின் 4 வயது பிஞ்சு மகன் அனிருத், தந்தைக்கு சல்யூட் அடித்து இறுது விடை கொடுத்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்க வைத்தது.