எளிமையான தலைவர்.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய தமிழிசை.. தெலுங்கானா மக்கள் பாராட்டு!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழக பாஜக தலைவராக இருந்த போது மிகவும் எளிமையாக இருந்தார். தற்போது ஆளுநர் ஆன பின்பும் கூட அந்த குணத்தை கடைபிடிக்கிறார்.
நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்!
ஆலோசனை செய்தார்
இந்த நிலையில் நேற்று ஆளுநர் தமிழிசை, தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் ஆலோசனை நடத்தினார். பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், இடஒதுக்கீடு , நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.
உணவு முறை
அதேபோல் அவரின் உணவு முறையை உலகம் முழுக்க கொண்டு செல்வது. தெலுங்கானாவில் மலை பகுதியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது. அவர்களின் மருத்துவ முறையை உலகறிய செய்வது என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தினார்.
நடனம் ஆடினார்
அதன்பின் பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா மக்களுடன் நீண்ட நேரம் கலகலப்பாக உரையாடினார் தமிழிசை. பின் அவர்களுடன் சேர்ந்து கோயா இன மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆடினார். அவர் பழங்குடியின மக்களுடன் இயல்பாக பழகி, நடனம் ஆடியது எல்லோரையும் கவர்ந்தது.
|
கல்லூரி காலம்
அதன்பின் தன்னுடைய கல்லூரி காலத்தில் பழங்குடியின மக்களுக்கு எப்படி மருத்துவ உதவிகள் செய்தேன். அந்தமான் பழங்குடிகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று பல விஷயங்களை தமிழிசை பகிர்ந்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அணுகுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறார் என்று தெலுங்கானா மக்கள் பாராட்டி உள்ளனர்.