ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!

மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!

    ஹைதராபாத்: தாலி கட்ட அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகன்.. வசதியாக வாழ்ந்து வந்தவர்.. இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரும்கூட!

    groom committed suicide during marriage time

    சந்திப்புக்கும், அவரது சொந்தக்கார பெண்ணுக்கும் போன மாதம் நிச்சயதார்த்தம் செய்தார்கள்.நேற்று கல்யாணம் வைத்திருந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை டிரஸ் பண்ணிக் கொண்டு வரேன் என்று போனவர், அவர் ரூமை விட்டுவெளியே வரவே இல்லை... தாலி கட்ட அரை மணி நேரம்தான் இருப்பதால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ரூம் கதவை தட்டினர்.

    ஆனால் திறக்கவே இல்லை.. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அப்போது, சந்திப் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை கண்டு உறவினர்கள் கதறி துடித்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்து விசாரணையை நடத்தினர். அப்போது, சந்திப்பின் அம்மா ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாத்தா , பாட்டிதான் சந்திப்பை வளர்த்து வந்துள்ளனர்.

    கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை! கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை!

    இதில், தாத்தா கொஞ்ச நாளைக்கு முன்பு இறந்துவிட்டார். தாத்தா இறந்ததில் இருந்து சந்திப் சோகமாகவும், கடுமையான மன உளைச்சலிலும் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அதனால் தாத்தா பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் இப்படி தற்கொலை முடிவுக்கு வந்தாரா அல்லது வேறு யாருடனாவது காதல் வசப்பட்டு இருந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    சந்திப்பின் உடலை கண்டு கல்யாணப் பெண் கதறி அழுதது குடும்பத்தாரை நிலைகுலைய செய்துவிட்டது. தாலி கட்ட அரை மணி நேரமே இருந்த நிலையில் மணமகன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Bridegroom committed suicide Just 30 minutes before marriage at hyderabad and investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X