ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்த்து பெற நேரில் சென்ற ஜெகன்மோகன்.. கட்டி அணைத்து பூரிப்படைந்த கேசிஆர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவை சந்திக்க சென்ற ஜெகன்மோகன் ரெட்டியை கட்டி அணைத்து வரவேற்றார் ராவ்.

ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால் மாநிலத்தை ஆண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

மோடிக்கு ஆதரவு அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு? இன்று டெல்லியில் சந்திப்பு! மோடிக்கு ஆதரவு அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு? இன்று டெல்லியில் சந்திப்பு!

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அவர் வரும் 30-ஆம் தேதி பதவியேற்கிறார். இந்த விழாவுக்கு தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவை நேரில் அழைக்க சென்றார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை சந்திரசேகர ராவ் வெளிப்படுத்தினார்.

பரிசு

பரிசு

இதையடுத்து ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். சில நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தின் முடிவில் ஜெகன்மோகன் ரெட்டி வீணையை கே சந்திர சேகர ராவ் பரிசாக அளித்தார்.

2011-இல் கட்சி உருவாக்கம்

2011-இல் கட்சி உருவாக்கம்

விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸில் இருந்து வெளியேறி கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் எலியும் பூனையுமாக இருந்த சந்திரசேகரராவ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Jagan Mohan Reddy meets K Chandrasekara Rao to invite for his take oath as CM od Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X