மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஊபா சட்டத்தின் கீழ் உஸ்மானியா பல்கலை. பேராசிரியர் கைது
ஹைதராபாத்: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் கே. ஜெகன், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா வித்யார்த்தி வேதிகா அமைப்பின் தலைவர் மத்திலெதி மீது நல்லகுண்டா போலீசார் சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் உஸ்மானியா பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஜெகன் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மத்திலெதி, ஜெகன் உள்ளிட்டோர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
3 காரணங்கள்.. 2 வல்லரசுகள்.. சிவப்பு கொடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் காவி கொடி.. என்ன காரணம்?
நல்லமல்லா வனப்பகுதியில் யுரேனியம் சுரங்கம் அமைக்க மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.